Friday 3rd of May 2024 05:17:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்  அணியில் 6 சர்வதேச வீரர்கள்!

யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியில் 6 சர்வதேச வீரர்கள்!


லங்கா பிரீமியர் லீக் (LPL) 20-20 கிரிக்கெட் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணியில் 6 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விளையாடவுள்ளனர்.

சோயிப் மாலிக் – பாகிஸ்தான், உஸ்மான் ஷின்வாரி – பாகிஸ்தான், கைல் அபோட் – தென்னாப்பிரிக்கா, டுவான் ஒலிவர் – தென்னாப்பிரிக்கா, ரவி போபரா – இங்கிலாந்து, ரொம் மூர்ஸ் –இங்கிலாந்து ஆகிய சர்வதேச கிரிக்கெட் அணி வீரர்களே யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் திலின கண்டாம்பி யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வீரர் ஹேமங் பதானி துணைப் பயிற்சியாளராக செயற்படுவார்.

116 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இலங்கையைச் சேர்ந்த மரியோ வில்லவராயன் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் சச்சித் பத்திரன - சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

களத்தடுப்பு பயிற்சியாளராக விமுக்தி தேசப்பிரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணித் தலைவராக இலங்கையின் சகலதுறை வீரர் திசார பெரேரா இருப்பார்.

அத்துடன், வனிது ஹசரங்க, சுரங்க லக்மல், தனஞ்சய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியில் விளையாடவுள்ளனர்.

யாழ்.பரியோவான் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரியின் வீரர்களான வி.வியஸ்காந்த், தி.டினோஷன் மற்றும் க.கபில்ராஜ் ஆகியோரும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி வீரர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE